
மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான ஊதியத்தினைத் தங்களுக்கும் வழங்க வேண்டும் என தமிழ்நாட்டினைச் சேர்ந்த அரசு மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் அரசு மருத்துவர்கள் இன்று தங்கள் கோரிக்கையினை வலியுறுத்தும் விதமாக மருத்துவமனை வளாகத்தில் மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.